follow the truth

follow the truth

February, 15, 2025
HomeTOP2யோஷிதவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு அறிவித்தல்

யோஷிதவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு அறிவித்தல்

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் எஞ்சிய 2 துப்பாக்கிகளையும் மீள ஒப்படைக்குமாறு அறிவித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

யோஷித்த ராஜபக்ஷவிடம் சுமார் 6 துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் இரண்டு துப்பாக்கிகள் மீள ஒப்படைக்கப்படவில்லை எனவும் அதனை ஒப்படைக்குமாறு அவருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவின் மீளாய்வின் பின்னரே துப்பாக்கிகளை மீள வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர், தனிநபர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் துப்பாக்கிகளில் இருந்து182 துப்பாக்கிகள் மட்டுமே பெறப்பட உள்ளதாக தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

UNP உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (14) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்...

மஹபொல புலமைப்பரிசிலை காலதாமதம் இன்றி முறையாக வழங்க நடவடிக்கை

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற...

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டுக்கு பரிந்துரைக்க நிபுணர் குழு

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிபுணர் குழுவில்...