follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2ரவிந்திர நம்முனிகேவின் கைப்பேசி அரச இரசாயன பகுப்பாய்வுக்கு

ரவிந்திர நம்முனிகேவின் கைப்பேசி அரச இரசாயன பகுப்பாய்வுக்கு

Published on

மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவிந்திர நம்முனிகேவின் கைபேசி அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கையொன்றை பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டது.

தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான பதிவை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனியின் தொலைபேசி எண்ணை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கையொன்றை பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டது.

குறித்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் வசமிருந்த கையடக்கத் தொலைபேசியை பெற்று அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை கோருவதற்கு அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.

வழக்கு விசாரணைகளை ஜூலை 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை கருத்திற் கொண்டு எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு...

அம்பலங்கொடை பொலிஸாரினால் கைது செய்த இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...