follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP2யுத்த நிறுத்தத்திற்கு மத்தியில் காஸாவில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு சவூதி கண்டனம்

யுத்த நிறுத்தத்திற்கு மத்தியில் காஸாவில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு சவூதி கண்டனம்

Published on

காஸாவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற யுத்த நிறுத்தத்திற்கு மத்தியில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கண்டனம் வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்டத்தை பொருட்படுத்தாமல், காஸா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை கண்டிப்பதாகவும் சவூதி அரேபியா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் நேரடியாக நடத்தப்படுகின்ற ஷெல் தாக்குதல்களையும் கண்டிப்பதாக சவூதி அரேபியா வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

Vidiyal | விடியல்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு – 03 நாட்களுக்கு நிறுத்தம்

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும்...

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தனது அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின்...

தேர்தல் தினத்தன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு பூட்டு

எதிர்வரும் செவ்வாய்கிழமை(06) மதியம் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்...