follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP2சுகாதார அமைச்சருக்கும் உலகளாவிய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார அமைச்சருக்கும் உலகளாவிய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே கலந்துரையாடல்

Published on

உலகளாவிய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று (24) சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்து, நாட்டில் காசநோய் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் மானியங்களை செயல்படுத்துவது மற்றும் தற்போதைய முன்னேற்றம் குறித்து சுகாதார அமைச்சருடன் சிறப்பு கலந்துரையாடல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்றது.

நாட்டின் சுகாதாரத் துறையில் காசநோய் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான மானியங்களை செயல்படுத்துவது மற்றும் இந்த விஷயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்வதே உலக நிதியக் குழுவின் நாட்டிற்கான பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

உலகளாவிய நிதிக் குழுவின் நாட்டிற்கான விஜயத்தின் பிற நோக்கங்களில், சுகாதார தகவல் மற்றும் தர மேம்பாட்டுத் திட்டம் (HIQI திட்டம்) குறித்து ஆராய் வதும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து முக்கிய தொழில்நுட்ப பங்காளிகள் மற்றும் நன்கொடையாளர்களைச் சந்திப்பதும் அந்த நோக்கத்தில் அடங்கும் என்று தூதுக்குழு சுகாதார அமைச்சரிடம் தெரிவித்தது.

காசநோய் மற்றும் எச்ஐவி மானியங்களுக்கான ஏழாவது மானிய சுழற்சியை (GC7) செயல்படுத்துதல், சுகாதார தகவல் மற்றும் தர மேம்பாடு (HIQI) திட்டத்தை செயல்படுத்துவதை விரைவுபடுத்துதல் மற்றும் COVID-19 feedback பொறிமுறை குறித்தும் உலகளாவிய நிதியத்தின் பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இலங்கையுடனான நீண்டகால உறவுக்காகவும், எச்.ஐ.வி/எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தை அதன் தொடக்கத்திலிருந்து இன்றுவரை ஆதரிப்பதற்கும், இலங்கையின் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த நிதி வழங்குவதற்கும் உலகளாவிய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தனது நன்றியைத் தெரிவித்தார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக உலகளாவிய நிதியம் அளித்து வரும் ஆதரவைப் பாராட்டுவதாகவும், இந்த ஆதரவு எதிர்காலத்திலும் தொடரும் என்று நம்புவதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கும் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் வளங்களை ஈர்த்தல், நிர்வகித்தல் மற்றும் விநியோகித்தல் என்ற நோக்கத்துடன் 2002 இல் நிறுவப்பட்ட உலகளாவிய நிதியம், இந்த மூன்று நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் நிதி ஆதாரங்களை வழங்குகிறது மற்றும் நாடுகளில் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு தங்களுடைய அதரவை வழங்குகின்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...