follow the truth

follow the truth

August, 28, 2025
HomeTOP2EPF நிதி செலுத்தாத 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் - அரசாங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்

EPF நிதி செலுத்தாத 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் – அரசாங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்

Published on

அரசாங்க, அரச சார்பு மற்றும் தனியார்துறை நிறுவனங்களுக்கு உட்பட்ட 22,450 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கான 36 பில்லியன் ரூபா சேமநல நிதியை செலுத்தத் தவறிவிட்டதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமநல நிதியாக செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தத் தவறிய இந்த நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொழில் திணைக்களத்தின் புதிய ஆணையர் நாயகத்தின் பதவியேற்பு நிகழ்வின்போது ஊடகவியராளர்கள் மத்தியில் நேற்று (24) உரையாற்றியபோது இதனை தெரிவித்த அவர், தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

பாதுகாக்கப்பட்ட முதலீடுகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் தனது தொழில்வாய்ப்புக்கு உட்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும் ஊழியர் சேமலாப நிதி பங்களிப்புகளை செலுத்தும் பொறுப்பு முதலாளிக்கு உண்டு.

தவறு செய்யும் முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழில் திணைக்களத்தின் செயற்பாடுகள் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து விரைவில் இதற்கான திட்டம் முன்னெடுக்கப்படும். இந்த முயற்சியின் மூலம், தொழில் திணைக்களத்தின் முழு செயற்பாடுகளையும் டிஜிட்டல் மயமாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...