follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2மருந்துகளுக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணய வர்த்தமானி வெளியீடு

மருந்துகளுக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணய வர்த்தமானி வெளியீடு

Published on

மருந்துகளுக்கான உச்சபட்ச சில்லறை விலை பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியின் நோக்கம், மருந்துகளின் விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மை, நியாயத்தன்மை, கட்டுப்படியான விலை ஆகியவற்றை உறுதி செய்வதாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்த உச்சபட்ச சில்லறை விலையை மாற்றியமைக்கும் அதிகாரத்தை தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கொண்டுள்ளதுடன், நாணயப் பெறுமதியின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, பொதுமக்களின் நலனுக்காக எந்த நேரத்திலும் உச்சபட்ச சில்லறை விலைகளை மாற்றுவதற்கான சட்டபூர்வ அதிகாரத்தையும் ஆணைக்குழு கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...