follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

Published on

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவு முகாமையாளர் எச் ஜயதிலக தெரிவித்தார்.

இந்த வருமானம் எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும், தெரிவித்தார்.

இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு திரும்புவதற்காக விசேட பேருந்து சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக எச் ஜயதிலக தெரிவித்தார்.

தற்போது 24 மணிநேரமும் பேருந்து சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கண்டி – கொழும்பு வீதியில் மாத்திரம் இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 150 பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...