கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 608 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 896,884 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 38,744 ஆகும்.