follow the truth

follow the truth

May, 8, 2025
HomeTOP2பாடசாலை மாணவியையும், அவரது தாயையும் அச்சுறுத்திய நபர் கைது

பாடசாலை மாணவியையும், அவரது தாயையும் அச்சுறுத்திய நபர் கைது

Published on

அனுமதியின்றி காரில் நுழைந்து 8 வயது சிறுமியையும் அவரது தாயாரையும் அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் இன்று (7) கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2 ஆம் திகதி கருவாத்தோட்டம், ப்ளவர் வீதி பகுதியில் காரொன்றுக்குள் குறித்த சந்தேக நபர் சட்டவிரோதமாக நுழைந்து 8 வயது சிறுமியை உள்ளே தள்ளி மிரட்டிய சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, கருவாத்தோட்டம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தேக நபர் கொலன்னாவ பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் மின்கட்டணத் திருத்தம்

இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக...

பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க பதவிப் பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (08)பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். மறைந்த கோசல...