follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2தெமட்டகொடை ரயில் கடவையில் திருத்தப் பணி - வாகனப் போக்குவரத்து மட்டு

தெமட்டகொடை ரயில் கடவையில் திருத்தப் பணி – வாகனப் போக்குவரத்து மட்டு

Published on

தெமட்டகொடை ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, மே 24 ஆம் திகதி குறித்த வீதி வாகனப் போக்குவரத்திற்கு முழுமையாக மூடப்படும் என இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பி இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒருகொடவத்தையில் இருந்து பொரளை வரை செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள தெமட்டகொடை ரயில் கடவையில் மே 24 அன்று அவசர புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் காரணமாக, மே 24 ஆம் திகதி காலை 9:00 மணி முதல் மே 25 ஆம் திகதி காலை 6:00 மணி வரை பிரதான வீதி வாகனப் போக்குவரத்திற்கு முழுமையாக மூடப்படும்.

இந்தக் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய வாகன நெரிசல் மற்றும் அசௌகரியங்களை குறைக்க, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு தம்மிக்க ஜயசுந்தர தனது அறிக்கையில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...