follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP2போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய இன்று முதல் விசேட நடவடிக்கை

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய இன்று முதல் விசேட நடவடிக்கை

Published on

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக இன்று (21) முதல் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த விசேட போதைப்பொருள் நடவடிக்கையை அனைத்து மட்டங்களிலும் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் நேரடி பங்கேற்புடன் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்கால குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உட்பட அனைத்து குடிமக்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாதலை தடுப்பது, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலால் சமூகத்தில் ஏற்படும் பேரழிவைத் தடுப்பது, போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் சமூக கலாச்சார, சமூக தார்மீக, பொருளாதார மற்றும் சுகாதார சீரழிவைத் தடுப்பது, போதைப்பொருள் கடத்தல் காரணமாக நாட்டிலிருந்து அந்நியச் செலாவணி சட்டவிரோதமாக வெளியேறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பது மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களை விநியோகிக்கும் வலையமைப்பை உடைப்பது ஆகியவை இதன் நோக்கங்களாகும்.

இந்த நடவடிக்கையை செயல்படுத்துவது குறித்து சகல பொலிஸ் அதிகாரிகளையும் தெளிவூட்ட, பிரதி பொலிஸ்மா அதிபர் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மருத்துவ தொழில் வல்லுநர்கள் நாளை முன்னெடுக்கவிருந்த போராட்டம் கைவிடப்பட்டது

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் நாளை (22) முன்னெடுக்கவிருந்த நாடளாவிய ரீதியிலான அடையாள வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக...

மலையக ரயில் சேவையில் தாமதம்

நானுஓயா மற்றும் அம்பேவெலவிற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

இம்முறை பொசொன் நிகழ்விற்கு முழு அரச அனுசரனை

2025 ஆம் ஆண்டு முழு அரச அனுசரனையுடன் பொசொன் தினத்தை நடத்துவது தொடர்பில்,மிஹிந்தலை ராஜமஹா விகாராதிபதி வண. வலவாஹெங்குனுவெவே...