follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய இன்று முதல் விசேட நடவடிக்கை

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய இன்று முதல் விசேட நடவடிக்கை

Published on

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக இன்று (21) முதல் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த விசேட போதைப்பொருள் நடவடிக்கையை அனைத்து மட்டங்களிலும் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் நேரடி பங்கேற்புடன் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்கால குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உட்பட அனைத்து குடிமக்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாதலை தடுப்பது, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலால் சமூகத்தில் ஏற்படும் பேரழிவைத் தடுப்பது, போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் சமூக கலாச்சார, சமூக தார்மீக, பொருளாதார மற்றும் சுகாதார சீரழிவைத் தடுப்பது, போதைப்பொருள் கடத்தல் காரணமாக நாட்டிலிருந்து அந்நியச் செலாவணி சட்டவிரோதமாக வெளியேறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பது மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களை விநியோகிக்கும் வலையமைப்பை உடைப்பது ஆகியவை இதன் நோக்கங்களாகும்.

இந்த நடவடிக்கையை செயல்படுத்துவது குறித்து சகல பொலிஸ் அதிகாரிகளையும் தெளிவூட்ட, பிரதி பொலிஸ்மா அதிபர் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...