follow the truth

follow the truth

June, 21, 2025
HomeTOP1மருத்துவ தொழில் வல்லுநர்கள் நாளை முன்னெடுக்கவிருந்த போராட்டம் கைவிடப்பட்டது

மருத்துவ தொழில் வல்லுநர்கள் நாளை முன்னெடுக்கவிருந்த போராட்டம் கைவிடப்பட்டது

Published on

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் நாளை (22) முன்னெடுக்கவிருந்த நாடளாவிய ரீதியிலான அடையாள வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் நாடளாவிய ரீதியிலான அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்தனர்.

சுகாதார அமைச்சின் பதில் சுகாதார செயலாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படவிருந்த போராட்டத்தைத் தற்காலிகமாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் நிறுத்தியுள்ளது.

அதன்படி, நாளை (22) சேவைகள் வழமைபோல இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...

காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்க்க பொறுப்புள்ள அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்படும்

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை...

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு...