follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுகைதிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

கைதிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

Published on

சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள 18,453 கைதிகளுக்கு மூன்றாவது கட்ட தடுப்பூசியாக பைசர் வழங்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் நிர்வாக மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

கைதிகளுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள வெலிக்கட, மெகசின், கொழும்பு ரிமாண்ட், வடரெகா, மஹர மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளுக்கு கைதிகளுக்கு இன்று (29) மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டது.

எதிர்வரும் நாட்களில் ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கும் மூன்றாவது கட்ட தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...