follow the truth

follow the truth

June, 16, 2025
HomeTOP2உப்பு இறக்குமதி செய்வதற்கு எந்தவித தடையையும் நாங்கள் விதிக்கவில்லை

உப்பு இறக்குமதி செய்வதற்கு எந்தவித தடையையும் நாங்கள் விதிக்கவில்லை

Published on

சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் நாட்டிற்கு உப்பு இறக்குமதி செய்வதற்கு பல்வேறு தடைகளை உருவாக்கி வருவதாக வெளியான செய்தி தவறானது எனவும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் அல்லது அதன் கீழ் உள்ள எந்தவொரு நிறுவனத்தால் அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்றும் ஊடகங்களில் பல தவறான செய்திகள் பரப்பப்படுவதை அவதானிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பி. ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் விளக்கமளித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், 22.05.2025 நிலவரப்படி, 117 இறக்குமதியாளர்கள் உப்பு இறக்குமதி செய்வதற்கு அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு கோரிக்கைக் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேற்படி விண்ணப்பதாரர்கள் கோரியபடி, நேற்று (22) நிலவரப்படி, 150,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உப்பை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பதில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த உப்புத் தொகுதி துறைமுகத்தை அடைந்தவுடன் விரைவாக விடுவிப்பதற்கும் தேவையான அனுமதி வழங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தாமதம் ஏற்பட இடமில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பி. ஆனந்த ஜெயலால் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...