follow the truth

follow the truth

June, 21, 2025
HomeTOP2கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்

Published on

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “Clean Sri Lanka” ஒத்துழைப்புடன் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாய்க்கால்களை நிலையாக பேணுவதை இலக்காக கொண்டு அவற்றை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (30) நகர அபிவிருத்து, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் நடைபெற்றது.

நகர பகுதிகளில் வாய்க்கால்களை அண்டிய சுற்றுச் சூழல் சுத்தப்படுத்தும் பணி நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அமைந்துள்ள செத்சிரிபாய வளாகத்தின் அருகில் காணப்படும் பொல்துவ வாய்க்காலிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அமைச்சின் கீழுள்ள இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுற்றாடல், சமூகம், ஒழுக்கம் உள்ளிட்ட மூன்று தூண்களை முதன்மைப்படுத்திய “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் கீழ் நீரின் தரத்தை பாதுகாத்தல் மற்றும் வௌ்ளத்தை கட்டுப்பத்துவதற்கான சர்பன்டைன் வாய்க்கால், செபஸ்தியன் வாய்க்கால்,மாவதகம வாய்க்கால், தெமடகொட வாய்க்கால் உள்ளிட்ட கொழும்பு தலைநகரின் பிரதான வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்பட்டு பேணப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...

காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்க்க பொறுப்புள்ள அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்படும்

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை...

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு...