follow the truth

follow the truth

August, 23, 2025
HomeTOP2கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்

Published on

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “Clean Sri Lanka” ஒத்துழைப்புடன் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாய்க்கால்களை நிலையாக பேணுவதை இலக்காக கொண்டு அவற்றை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (30) நகர அபிவிருத்து, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் நடைபெற்றது.

நகர பகுதிகளில் வாய்க்கால்களை அண்டிய சுற்றுச் சூழல் சுத்தப்படுத்தும் பணி நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அமைந்துள்ள செத்சிரிபாய வளாகத்தின் அருகில் காணப்படும் பொல்துவ வாய்க்காலிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அமைச்சின் கீழுள்ள இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுற்றாடல், சமூகம், ஒழுக்கம் உள்ளிட்ட மூன்று தூண்களை முதன்மைப்படுத்திய “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் கீழ் நீரின் தரத்தை பாதுகாத்தல் மற்றும் வௌ்ளத்தை கட்டுப்பத்துவதற்கான சர்பன்டைன் வாய்க்கால், செபஸ்தியன் வாய்க்கால்,மாவதகம வாய்க்கால், தெமடகொட வாய்க்கால் உள்ளிட்ட கொழும்பு தலைநகரின் பிரதான வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்பட்டு பேணப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...