நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுத் தலைவர்கள் 2023ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் 6 ஆம் பிரிவிற்கு அமைய குறித்த உள்ளூராட்சி அதிகார சபைகளில் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஒப்படைந்துள்ள தேர்தல் செலவு அறிக்கையின் பிரதிகளை பார்வையிட முடியும்.
அதன்படி, தேர்தல் செலவு அறிக்கைகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 7 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களில், அலுவலக நாட்களில் காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை பார்வையிட அல்லது முறைப்பாடளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.