follow the truth

follow the truth

June, 6, 2025
HomeTOP2கணேமுல்ல சஞ்சீவ கொலை - துப்பாக்கிதாரிக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரிக்கு விளக்கமறியல்

Published on

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்ற சந்தேக நபர் இன்று (4) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அடையாளம் காண இரண்டு சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டனர், ஆனால் அவர்கள் சந்தேக நபரை அடையாளம் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் குறித்த சந்தேக நபர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் உத்தியோகபூர்வ அறையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரை இந்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் சந்தேக நபரை ஸ்கைப் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“முளைப்பதற்கு இடமளிப்போம்” – ஜனாதிபதி

கொங்கிறீட் பிளாஸ்டிக்கினால் அழிந்துள்ள சூழலை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகவும், தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்கு சுற்றாடலைப் பயன்படுத்த முடியும்...

பாடசாலை வளாகங்களில் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய்களை தடுக்க நடவடிக்கை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாக கல்வி...

பஸ் விபத்துகளை தடுக்க புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர...