மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் விவசாய காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.
நெல், சோளம், உருளைக்கிழங்கு, வெங்காயம், போஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகிய பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கே இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக ஐந்து ஏக்கர் வரை இழப்பீடுகள் வழங்கப்படும். விவசாயிகள் தங்கள் பயிர்ச் சேதம் குறித்து விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் 1918 என்ற தொலைபே இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 100,000 ரூபா வரை காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.