பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணிகளுக்காக விசேட பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் பாதையில் ஏற்பட்ட குழி காரணமாக பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரயில் சேவையை விரைவாக இயல்பு நிலைக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார்.