சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை எதிர்வரும் ஜுலை மாதம் 18 ஆம் திகதி பரீசிலனைக்கு எடுக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மாணவர் சரித் தில்ஷான் தயானந்தா கடுமையான பகிடி வதைக்கு உள்ளாகி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரியும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த பிரதிவாதிகளுக்கு உத்தரவிடக் கோரியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.