follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP2இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கான அறிவித்தல்

இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கான அறிவித்தல்

Published on

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் செயற்பாட்டு மட்டத்தில் இல்லை என்று இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகார சபை (PIBA) தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வேலை தேடும் இலங்கையர்களும், தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக அனுப்பப்படுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறார்கள்.
இவ்வறிவித்தல் இஸ்ரேலில் பணிபுரிந்து, மீண்டும் வேலைக்கு இஸ்ரேலுக்குச் செல்லும் எதிர்பார்ப்புடன் இலங்கைக்குத் திரும்பிய இலங்கையர்களுக்கும் பொருந்தும்.

1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் (SLBFE) சட்டத்தின் பிரிவு 39 (1) (b) இன் படி, மறு – அறிவிப்பு வரும்வரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் பதிவுகள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதுடன், எதிர்காலத்தில் இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளுக்கான வழிகாட்டல்கள் இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபையின் (PIBA) அறிவிப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறுவர் பாதுகாப்பு வெறும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல

சிறுவர் பாதுகாப்பு எந்த வகையிலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல என்றும், குழந்தைகளை பராமரிப்பது வெறும் பெண்களின் பொறுப்பாக...

*தோல்வியின் பிதாவாக சஜித் மாறியுள்ளார்” – இராமலிங்கம் சந்திரசேகர்

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் சேவைக்கு பாராட்டு

நல்ல விடயங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பதுடன், கெட்டதைத் தடுப்பதற்கு போராடுவதும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தவகையில் நிதி அமைச்சின்...