இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் சுமார் 2,000 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரையில் வீதி விபத்துக்களினால் 1,133 பேர் உயிரிழந்தனர்.
7,152 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முறையற்ற விதத்தில் வாகனம் செலுத்துதல், உள்ளிட்ட செயற்பாடுகளினால் வீதிவிபத்துகள் ஏற்படுகின்றன.