காலி மற்றும் களுத்துறை கடற்கரைகளில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன 6 கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படை, பெல் 412 உலங்கு வானூர்தி மற்றும் ஒரு Y-12 விமானத்தை ஈடுபடுத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சிறப்பு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட மீன்பிடி படகும், மொரகல்ல பகுதியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகும் இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளன.