follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP2கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

Published on

கொழும்பு – அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி நேரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், போமிரிய மத்திய மகா வித்தியாலயம் அதன் 106ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வீதி அணிவகுப்பு காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யானைகள் உள்ளிட்ட சுமார் 25 நடனக் குழுக்களின் பங்கேற்புடன் இந்த வீதி அணிவகுப்பு மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி, நவகமுவ சுகதபிம்பாராம புராதன ராஜமகா விகாரையில் இருந்து குறித்த வித்தியாலயம் வரை பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, பயணிகள் கீழ்க்கண்ட மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து ஜனாதிபதி நிதியத்திற்கு 100 மில்லியன் ரூபா நன்கொடை

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின்,...