follow the truth

follow the truth

July, 21, 2025
HomeTOP1பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 21 பேர் காயம்

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 21 பேர் காயம்

Published on

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று ( 21) அதிகாலை 5 மணி அளவில் கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ பகுதியில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வெரகொடவிலிருந்து கேகாலை நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தும், கேகாலையிலிருந்து இரத்தினபுரி நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் கூறினர்.

விபத்தில் 21 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கேகாலை மற்றும் வரகாபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விசேட சுற்றிவளைப்பில் 1,241 பேர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,241 நபர்கள் கைது...

ஆகஸ்ட் 10ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்...

ரோஹிதவின் மகள் – மருமகன் வெளிநாடு செல்ல தடை

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகன் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாலனை ஊழல் தடுப்பு பிரிவின்...