follow the truth

follow the truth

July, 23, 2025
HomeTOP2சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அளித்த வாக்குறுதி

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அளித்த வாக்குறுதி

Published on

சட்டவிரோத சுற்றுலா வழிகாட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இன்று (23) உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

இலங்கை சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர்கள் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு அழைக்கப்பட்ட போது, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மனுதாரர் சங்கத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, சட்டவிரோத சுற்றுலா வழிகாட்டிகலால் சுற்றுலாத் தொழிற்துறை சரிந்து, நாடு அந்நிய செலாவணியை முற்றிலும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த சூழ்நிலையைத் தடுக்க பிரதிவாதிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் இன்றி தொடர்ச்சியான மருந்து விநியோகத்தை உறுதி செய்ய ஜனாதிபதி அறிவுறுத்தல்

மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர்...

யுனெஸ்கோ உறுப்பினர் பதவியிலிருந்து அமெரிக்கா விலகியது

யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்கா இன்று (22) விலகுவதாக அறிவித்தது. இஸ்ரேல் மீதான அதன் சார்பு மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவை...

மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை செயற்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

தற்போதைய பொலிஸ்மா அதிபர், தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பிய...