ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
அதற்கு ஆதரவாக 181 வாக்குகளும் எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை.
அதன்படி, ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் 181 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.