follow the truth

follow the truth

July, 30, 2025
Homeஉலகம்இந்தியாவில் பேரூந்து மற்றும் லொறி விபத்து – 18 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் பேரூந்து மற்றும் லொறி விபத்து – 18 பேர் உயிரிழப்பு

Published on

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த கோரமான விபத்தில் 18 கன்வார் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மோகன்பூர் காவல் பிரிவின் எல்லைக்குட்பட்ட ஜமுனியா வனப்பகுதிக்கு அருகே, ஏராளமான யாத்ரீகர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த ஒரு பேருந்து, எதிரே வந்த கேஸ் சிலிண்டர் ஏற்றிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் தாக்கம் இவ்வளவு மோசமாக இருந்ததால், 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளதாகவும், தூக்க கலக்கத்தால் வாகனம் ஓட்டும் நேரத்தில் சிறிதளவாவது கவனச்சிதறல் ஏற்பட்டால் இதுபோன்ற பெரும் விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதற்கான துயரமான எடுத்துக்காட்டு இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சாலைப் பயணத்தை தவிர்க்கும் பொறுப்புணர்வும் அவசியமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“நான் தலையிட்டதால்தான் போர் தவிர்க்கப்பட்டது” – இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் மீண்டும் கலக்கல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையில், அதனைத் தடுக்க தாமே சரியான நேரத்தில்...

நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து?

ஏமனில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த தாதியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளதாக...

இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அரபு மொழியை கட்டயாமாக்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியைக் (Islamic...