follow the truth

follow the truth

July, 30, 2025
HomeTOP2"நான் தலையிட்டதால்தான் போர் தவிர்க்கப்பட்டது" - இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் மீண்டும் கலக்கல்

“நான் தலையிட்டதால்தான் போர் தவிர்க்கப்பட்டது” – இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் மீண்டும் கலக்கல்

Published on

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையில், அதனைத் தடுக்க தாமே சரியான நேரத்தில் தலையிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் ஸ்காட்லாந்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ட்ரம்ப், சமீபத்தில் உலகம் முழுவதும் நிகழக்கூடிய ஆறு முக்கிய போர்களை தாமே தடுத்ததாகக் கூறினார்.

“நான் இல்லையென்றால், ஆறு பெரிய போர்கள் நடந்திருக்கும். அதில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் மிகக் கவலைக்கிடமானது. ஏனெனில் இரு நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருப்பவை.

இதுபோன்ற சூழ்நிலையில் போர் வெடித்திருந்தால், அது அணு ஆயுத வீழ்ச்சி மற்றும் பேரழிவாக மாறியிருக்கும். இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களை நான் நன்கு அறிவேன். அவர்கள் போர் வழியைத் தேர்ந்தெடுத்திருந்தால், அதற்கான விளைவுகள் கடுமையாக இருந்திருக்கும்..” எனத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட போர் சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு தாமாகவே எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றங்களைத் தாமே தடுப்பதாக ட்ரம்ப் பலமுறை கூறியிருக்கிறார். இருப்பினும், இதனை இந்திய மத்திய அரசு மறுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து?

ஏமனில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த தாதியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளதாக...

இந்தியாவில் பேரூந்து மற்றும் லொறி விபத்து – 18 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த கோரமான விபத்தில் 18 கன்வார் யாத்ரீகர்கள்...

இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அரபு மொழியை கட்டயாமாக்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியைக் (Islamic...