நேற்று கைதான எவருக்கும் கொவிட் தொற்று இல்லை

881

நேற்று கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்து செய்தல், வேதன முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆசிரியர்அதிபர்கள் நேற்று (04) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 16 பெண்கள் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு ரெப்பிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here