follow the truth

follow the truth

July, 11, 2025
Homeஉள்நாடுதுறைமுகத்திலுள்ள 800 கொள்கலன்களை விடுவிக்க டொலர் வழங்க தீர்மானம்

துறைமுகத்திலுள்ள 800 கொள்கலன்களை விடுவிக்க டொலர் வழங்க தீர்மானம்

Published on

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் இன்றைய தினம் விநியோகிக்கப்படவுள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இதன்படி, துறைமுகத்தில் தேங்கியுள்ள 800 அரிசி கொள்கலன்களை விடுவிப்பதற்காகவே டொலர் விநியோகிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் வர்த்தக அமைச்சு, தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

துறைமுகத்தில் கொள்கலன்கள் தேங்கியிருந்த காலப் பகுதியில், துறைமுகத்திற்கு செலுத்த வேண்டிய கட்டண தொகையை குறைக்குமாறு, தாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...