follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுகொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா  தெரிவித்துள்ளார்.

சுகாதாரச் சட்டங்களைப் புறக்கணித்து பலர் தன்னிச்சையாகச் செயல்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் இந்த எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த மாதத்தின் ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியாக வந்த நீண்ட வார இறுதி நாட்களின் போது பலரும் பல்வேறு பொது இடங்களுக்கு சென்றிருந்தனர்.

இதன்போது அதிகளவானவர்கள் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளையும், தங்களையும் பாதுகாக்கும் வகையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...