கொரோனா வைரசின் மையப் பகுதியாக மாறி வரும் கொழும்பு

931

இலங்கையில் கொரோனா வைரஸின் மையப்பகுதியாக கொழும்பு தொடர்ந்தும் உள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இன்னும் கண்டறியப்பட்டு வருகின்றனர். நேற்று கொழும்பு மாவட்டத்தில் 511 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கொழும்பில் இதேபோன்ற அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 74,380 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

எண்ணிக்கை அதிகரித்த போதிலும், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடைசி முயற்சியாக மட்டுமே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் நேற்று கூறியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here