follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுகடும் வெப்பம் : ஒன்றரை ஜிகாவாட் மின்சாரம் ஆவியானது

கடும் வெப்பம் : ஒன்றரை ஜிகாவாட் மின்சாரம் ஆவியானது

Published on

26 கிலோமீற்றர் பரப்பளவில் அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக நாளொன்றுக்கு இரண்டு மில்லியன் கனமீற்றர் நீர் ஆவியாகுவதாக பொறியியலாளர் வசந்த எஹலபிட்டிய தெரிவித்துள்ளார்.

இம் மாதத்தில் நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் 180 மில்லியன் கனமீட்டர் நீர் வெளியிடப்பட்டு ,தேசிய மின்கட்டமைப்பிற்கு சுமார் 85 ஜிகாவாட் மணிநேர மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தினசரி 2.5 முதல் 3.00 கிகாவாட் மணிநேரம் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 438 மீற்றர் என்பதுடன் 28 ஆம் திகதி வரை நீர்மட்டம் 423 மீற்றராகக் குறைந்துள்ளதாகவும் பொறியியலாளர் தெரிவித்தார்.

நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர் கொள்ளளவு 723 மில்லியன் கன மீட்டராகவும், இம்மாதம் 28ஆம் திகதி நிலவரப்படி 218.7 ஆகவும் இருந்தது.

இதன்படி இதுவரை ஒன்றரை ஜிகாவொட் மின்சாரத்தைத் தயாரிக்கக்கூடிய மின்சாரம் ஆவியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...