follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉலகம்சுனாமி பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் தொங்காவில் ஊரடங்கு

சுனாமி பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் தொங்காவில் ஊரடங்கு

Published on

தொங்கா நாட்டில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது.

தொங்கா தீவுப் பகுதி எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி பாதிப்புகளில் இருந்து மெதுவாக மீண்டுவரும் நிலையில், தற்போது தலைநகர் Nuku’alofa-வில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அண்மையில் எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியைத் தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் பெறப்பட்டுவரும் துறைமுகப்பகுதியில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் சியாவோசி சோவலேனி தெரிவித்துள்ளார்.

106,000 மக்கள் தொகை கொண்ட தொங்கா தீவில் சுமார் 60% மக்கள் இரு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுள்ளது

இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியாவில் 32 விமான நிலையங்களுக்கு பூட்டு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி...

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...