follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுபாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டம் திங்களன்று

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டம் திங்களன்று

Published on

நாட்டில் நிலவும் கொவிட் நிலைமைகளுக்கு மத்தியில் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடித்து பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கும், எதிர்வரும் அமர்வுகளில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள அலுவல்கள் குறித்து ஆலோசிப்பதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு எதிர்வரும் திங்கட்கிழமை (07) கூடவுள்ளது.

அத்துடன், பாராளுமன்றம் எதிர்வரும் 08ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு கூடவிருப்பதுடன், 11ஆம் திகதி வரை நான்கு நாட்கள் அமர்வுகளை நடத்துவதற்கு இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், அரசாங்க நிதி பற்றிய குழு மற்றும் இலங்கையில் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதற்கும், இதன் பரிந்துரைகளை பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்குமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு 08ஆம் திகதி கூடவுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...