follow the truth

follow the truth

July, 17, 2025
Homeஉள்நாடுவிவசாயிகளிடமிருந்து 100,000 கிலோ மஞ்சள் கொள்வனவு

விவசாயிகளிடமிருந்து 100,000 கிலோ மஞ்சள் கொள்வனவு

Published on

நாடளாவிய ரீதியில் விவசாயிகளிடமிருந்து 100,000 கிலோகிராம் மஞ்சள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக வாசனைத் திரவியங்கள் மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் தொடர்பான கைத்தொழில் ஊக்குவிப்புக்கான அரச அமைச்சு தெரிவித்துள்ளது.

கம்பஹா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய விவசாய அமைச்சும் இலங்கை வாசனைப் பொருள் சந்தைப்படுத்தல் சபையும் மஞ்சளை கொள்வனவு செய்துள்ளது.

ஒரு கிலோகிராம் மஞ்சளுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை 165 ரூபாய். இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் மஞ்சள் மூலமாக மஞ்சள்ப்பொடி மற்றும் உலர் மஞ்சள் தயாரிக்கப்பட்டு மசாலா சந்தைப்படுத்தல் சபையின் விற்பனை நிலையங்கள் மூலம் நியாயமான விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் என அரச அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு இன்று(16) கொழும்பு...

2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல்...

சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கத்தின் மானியமாக...