follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுமானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் ஆரம்பம்

மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் ஆரம்பம்

Published on

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 80 ரூபா விலையில் மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை வழங்குவதற்கு நிதி அமைச்சு எடுத்திருந்த தீர்மானத்திற்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த திட்டம் ஆரம்பகட்டமாக நுவரெலியா – வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் வைபவ ரீதியாக இடம்பெற்றதுடன், இதில் குறித்த தோட்டத்தில் 71 குடும்பங்களுக்கு இந்த கோதுமை மா வழங்கப்பட்டன.

அடுத்த கட்டமாக எதிர்வரும் காலங்களில் ஏனைய தோட்டங்களுக்கும் கோதுமை மா வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...