follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஇறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் கோளாறு

இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் கோளாறு

Published on

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரயில் பெட்டிகளை போக்குவரத்தில் இணைக்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன.

பெட்டிகளை ஒன்றோடொன்று இணைக்கும் பகுதியில் காணப்பட்ட கோளாறு காரணமாக, கடந்த 04 ஆம் திகதி முதல் குறித்த ரயில் பெட்டிகளை போக்குவரத்தில் இணைக்கும் செயற்பாடுகள் கைவிடப்பட்டதாக Locomotive operator பொறியிலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

ரயில் பயணிகள் மற்றும் ரயில் போக்குவரத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்னவிடம் வினவியபோது, சாரதிகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் சங்கங்கள் என்பன குறித்த ரயில் பெட்டிகளை போக்குவரத்தில் இணைக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பிலான அறிக்கை பொறியியலாளர்கள் சங்கத்தினால் இதுவரை தமக்கு வழங்கப்படவில்லையென ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை,...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...