follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை!

ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை!

Published on

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெளியுறவுத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், கூட்டு இராணுவ தளபதிகளின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் அமெரிக்கா உடனான அதிகாரப்பூர்வ தொடர்பு நீடிக்கும் எனவும் விளக்கமளித்துள்ளது.

இதனிடையே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு போர்க்குற்றவாளி என அமெரிக்க நாடாளுமன்றம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தத் தீர்மானத்தை குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம் முன்மொழிந்தார். இதனை குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அனைவருமே ஆதரித்துள்ளனர்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஏனைய நாடுகள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை முன்னெடுக்க உதவும்.

உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24ஆம் திகதி முதல் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...