follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்நவால்னிக்கு 9 ஆண்டு சிறை

நவால்னிக்கு 9 ஆண்டு சிறை

Published on

ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னிக்கு மேலும் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அரசை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கடந்த 2020ஆம் ஆண்டு விஷத் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஜேர்மனியில் இருந்து ரஷ்யா வந்த நவால்னியை ரஷ்யக் பொலிஸார் பல்வேறு தேசவிரோத வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நவால்னி மீதான அறக்கட்டளை நிதி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேலும் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரஷ்ய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் 11ஆயிரத்து 500 டாலர் அபராதத் தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பு குறித்து அமெரிக்கா, நவால்னியை மௌனமாக்குவதற்கும் உக்ரேன் படையெடுப்பை திசைதிருப்பவமும் மேற்கொள்ளப்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...