follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை: இருவர் கைது

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை: இருவர் கைது

Published on

நாவல பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணத்தை கொள்ளையடித்தமை தொடர்பில் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 27 மற்றும் 29 வயதான சந்தேகநபர்கள் இருவரும் கொழும் – 08 மற்றும் பொரளை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

நாவல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடந்த 18 ஆம் திகதி இரவு முச்சக்கர வண்டியில் சென்ற ஐவர் அங்கிருந்த ஊழியரை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...