follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்உக்ரைன் துறைமுகத்தை முற்றுகையிட்ட ரஷ்ய கடற்படைக் கப்பல் தாக்கி அழிப்பு

உக்ரைன் துறைமுகத்தை முற்றுகையிட்ட ரஷ்ய கடற்படைக் கப்பல் தாக்கி அழிப்பு

Published on

உக்ரைன் துறைமுகத்தை முற்றுகையிட்ட ரஷ்ய கடற்படைக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டதாக உக்ரைன் கடற்படை நேற்று தெரிவித்தது.

உக்ரைன் மீது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ரஷ்யா இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், உக்ரைனின் மரியுபோல் துறைமுக நகரம் அருகே அஸோவ் கடலில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய கப்பல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக உக்ரைன் கடற்படை சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொ்டியான்ஸ்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் மிகப்பெரிய கப்பல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல் காரணமாக துறைமுகத்தில் கரும்புகை சூழ்ந்துள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும், துறைமுகத்தில் ரஷ்ய கப்பல் தீப்பற்றி எரியும் காட்சிகளும் வெளியாகின. இந்தத் தாக்குதலை ரஷ்யா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...