உக்ரைன் துறைமுகத்தை முற்றுகையிட்ட ரஷ்ய கடற்படைக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டதாக உக்ரைன் கடற்படை நேற்று தெரிவித்தது.
உக்ரைன் மீது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ரஷ்யா இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், உக்ரைனின் மரியுபோல் துறைமுக நகரம் அருகே அஸோவ் கடலில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய கப்பல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக உக்ரைன் கடற்படை சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொ்டியான்ஸ்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் மிகப்பெரிய கப்பல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.
தாக்குதல் காரணமாக துறைமுகத்தில் கரும்புகை சூழ்ந்துள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும், துறைமுகத்தில் ரஷ்ய கப்பல் தீப்பற்றி எரியும் காட்சிகளும் வெளியாகின. இந்தத் தாக்குதலை ரஷ்யா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.