follow the truth

follow the truth

May, 8, 2025
Homeவிளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடர் இன்று ஆரம்பம்!

15 ஆவது ஐபிஎல் தொடர் இன்று ஆரம்பம்!

Published on

15ஆவது ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் திருவிழா, பல கோடி இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஆரம்ப போட்டியில் நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்துடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜாவும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஸ்ரேயஸ் ஐயரும் தலைமை தாங்கவுள்ளனர்.

இதுவரை இரு அணிகளும் 26 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 17முறை சென்னை அணியும் எட்டு முறை கொல்கத்தா அணியும் வெற்றிபெற்றுள்ளன. இரு போட்டிக்கு முடிவு இல்லை.

மெகா ஏலத்திற்கு பிறகு புதிய வீரர்களை வரவேற்றுள்ள அணிகள், மிக உத்வேகத்துடன் இத்தொடரில் விளையாடவுள்ளன. அத்துடன் இம்முறை புதிதாக இரு அணிகளின் வருகையும் இரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரோஹித் சர்மா

இந்திய அணித்தலைவராக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான...

எல்லையில் பதற்றமான சூழல் – ஐ.பி.எல் போட்டியில் மாற்றம்?

பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின்...

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...