follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்இம்ரான் கானை பதவியிலிருந்து நீக்குவதற்கான நம்பிக்கையில்லா பிரேரணை

இம்ரான் கானை பதவியிலிருந்து நீக்குவதற்கான நம்பிக்கையில்லா பிரேரணை

Published on

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை (Imran Khan) பதவியிலிருந்து நீக்குவதற்கான நம்பிக்கையில்லா பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை உரிய வகையில் முகாமைத்துவம் செய்யாமை தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்தே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை மறுதினம்(31) வியாழக்கிழமை பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அதன்பின்னர் 07 நாட்களுக்குள் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை National Assembly எனப்படும் அந்நாட்டு பாராளுமன்ற கீழ்ச்சபையின் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று(28) முன்மொழிந்திருந்தார்.

பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்தை அகற்றுவதற்கு, மொத்தமுள்ள 342 உறுப்பினர்களில் 172 பேரின் ஆதரவு தேவையென எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...