follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுபாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள கோரிக்கை

பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள கோரிக்கை

Published on

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், சில பகுதிகளில் திட்டமிடப்பட்ட வகையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தங்களின் பிரச்சினைகளை தெரிவித்து அமைதியான முறையில் ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், திட்டமிட்டவாறு வன்முறைகளை தூண்டும் வகையில் பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தி மற்றுமொரு குழுவினர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

ஜனநாயக விழுமியங்களைக் கடைப்பிடித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைதியை பாதுகாக்கவும் சட்டவிரோதமாக செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பாதுகாப்புத் தரப்பினர் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை முதல் நெல் கொள்முதல் ஆரம்பம்: புதிய விலை விவரம் வெளியீடு

நாளை முதல் (03) நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாளைய தினம் முதல்...

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி சவால்கள்: பொது ஆலோசனை கூட்டம் இன்று

நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (Renewable Energy) அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் அறிதலுக்காக, இன்று (02) பொது ஆலோசனை கூட்டம்...

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...