follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க மாட்டோம் : அரசாங்கம் அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க மாட்டோம் : அரசாங்கம் அறிவிப்பு

Published on

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் இல்லை என்று அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.

அமைச்சரவையின் இணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறுகையில், ஒகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதிக்கு நன்கொடையாக அளிக்கும் அமைச்சரவை முடிவு அரச துறையில் ஊதியக் குறைப்புக்கான முயற்சியல்ல என்று இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது கூறினார்.

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களின் ஒகஸ்ட் மாத சம்பளத்தை நிதிக்கு வழங்க அமைச்சரவை நேற்று முடிவு செய்திருந்தது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு அரச துறையிலோ அல்லது தனியார் துறையிலோ கூட ஊதியக் குறைப்புக்கான முயற்சியாகும் என்ற தகவலில் உண்மையில்லை என்று அழகப்பெரும கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேருந்து கட்டண குறைப்பு இன்று முதல் அமுலில்

வருடாந்திர கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு...

பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று...