இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு ஆளான ஜெர்மன் யுவதி, மற்றொரு நபருடன் சுற்றலா வந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இளைஞர் ஒருவர் யுவதியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம், அவர்களின் கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அவர்கள் குறித்த இளைஞர்களின் முகங்கள் அடங்கிய காணொளியை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து கண்டி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை மற்றும் மெதவெல பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுற்றுலாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.