follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுபிரதி சபாநாயகர் பதவி விலகல்

பிரதி சபாநாயகர் பதவி விலகல்

Published on

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாளை பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின் முதல் நாளில் புதிய பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, புதிய பிரதி சபாநாயகர் பதவிக்கு ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படும் நிலையில், வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டிய நிலை ஏற்படுமென பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்ததையடுத்து தமது இராஜினமா கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார்.

அவரது இராஜினமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுத்ததுடன், தொடர்ந்து பதவி வகிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...

இவ்வருடம் மட்டும் இதுவரை 66 துப்பாக்கிச் சூடு – 37 பேர் பலி

2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 66...