follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுமே மாத ஆரம்பத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும்

மே மாத ஆரம்பத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும்

Published on

மே மாத ஆரம்பத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்திக்க முடியும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனத்திற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேலும் சில விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

இதனிடையே, எரிவாயு கொள்வனவிற்காக உலக வங்கியிடமிருந்து 90 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற்றுக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிதியை லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்களின் சந்தை கேள்விக்கு அமைய பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...

இவ்வருடம் மட்டும் இதுவரை 66 துப்பாக்கிச் சூடு – 37 பேர் பலி

2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 66...

கொஸ்கொட மற்றும் பாணந்துறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் – விசாரணைகள் தொடர்கின்றன.

கொஸ்கொட மற்றும் பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர்...